இலங்கையில் யுத்தம் காரணமாக நிலவும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
யுத்த வலயத்தில் சிக்கியுள்ள சிவிலியன்கள் பாதுகாப்பாக இடம்நகர்த்தப்பட வேண்டுமென பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். மோதல்கள் உக்கிரமடைந்து செல்லும் இந்தத் தருவாயில் அப்பாவிச் சிவிலியன்களது நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்