மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் கரைப் பிரதேசத்தின், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின், வெல்லா வெளி கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பீலி ஆறு கிராமத்தில் நேற்று அதி காலை 2.00 மணியளவில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டை உடைத்து பெண்ணைத்தூக்கி முற்றத்தில் வீசி தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் ஒரு பெண் பிள்ளையின் தாயான ச. ரெத்தினம் (வயது 45) என கிராமசேவகர் என். ராகுலன் தெரிவித்தார். வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லி
நாட்டுக்குள் சிங்கம்..
வீட்டுக்குள் யாணை..
மக்களுக்குள் புலி..
அப்படியானால் …..??