கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நாளை

அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. குறித்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படமுன் மாகாண சபைகளின் கருத்தை அறிந்து கொள்ள முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாளைய விசேட செயலமர்வில் இச்சட்டதிருத்தம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

புதிய உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கிணங்க , உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார ரீதியில் அதிக வாக்குகளைப்பெறுபவருக்கே வெற்றி என்ற அடிப்படையில் நடத்தச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கைவிடப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *