சூரியன் இன்று 6ம் திகதி முதல் எதிர்வரும் 16ம் திகதி வரையும் இலங்கைக்கு நேர் உச்சத்தில் (சமீபமாக) தென்படும் என்று வானிலை அவதான நிலைய அதிகாரி சமிந்த டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.
இதன்படி இன்று நண்பகல் 12.13 மணிக்கு காலி- ஹிக்கடுவ, நாக்கியாதெனியா, மகாலேவாய மற்றும் ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபெலஸ்ஸ ஆகிய இடங்களில் சூரியன் நேர் உச்சம் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சூரியன் வருடா வருடம் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு உச்சம் கொடுப்பது வழமையானதே.