வன்னியில் தொடரும் போர் தொடர்பான பிந்திய நிலைமைகளை அறிந்து கொள்வதற்காகவும், களமுனைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களுக்கான புதிய உத்தரவுகளை பிறப்பிப்பதற்காகவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று சனிக்கிழமை வவுனியா சென்றிருந்தார். வன்னி இராணுவத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியகொழும்பில் இருந்து சென்ற குழுவினரை வரவேற்று வன்னி இராணுவத் தலைமையக மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.
மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் களமுனையில் இருந்து வந்திருந்த மூத்த தளபதிகளுடன் சரத் பொன்சேகா விரிவான ஆலோசனைகளை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.தற்போதைய கள நிலைமைகளையிட்டு வன்னியில் இருந்து வந்த தளபதிகள் விளக்கிக் கூறிய அதே வேளையில், இந்த நிலையில் கையாள வேண்டிய உபாயங்கள் தொடர்பாக சரத் பொன்சேகா புதிய உத்தரவுகளை அவர்களுக்குப் பிறப்பித்திருப்பதாக கூறப்படுகின்றது.