அரசுடைமையாக்கப்படும் வாகனங்கள் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பயன்படுத்த ஜனாதிபதி பணிப்பு

ranjithsiyabalapitiya.jpgசுங்கச் சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அரசுடைமையாக்கப்படும் வாக னங்களை வடக்கு, கிழக்கு அபிவிருத்திப் பணிகளுக்கும், படையினருக்கும் பயன் படுத்த வழிவகுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, அரசுடைமையாக்கப் பட்டிருக்கும் பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் துறைமுக அதிகார சபைக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். முதலில் வாகனங்களை விற்பனை செய்வதற்கே நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அரச வருவாய்த்துறை மற்றும் பிரதிநிதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

ஏல விற்பனையில் முன்பு குறிப்பிட்ட நிறுவனத்தினரே பங்கேற்று வந்தனர். எனவே, இதில், பரவலான பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுமுகமாக, பரந்து பட்ட பிரசாரத்தை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *