வரி விலக்களிப்பின் மூலம் அரசுக்கு ரூ.8 பில். நஷ்டம்

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக 2008ஆம் ஆண்டு வரிவிலக்கு அளிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அரச வருவாய்த்துறை அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருள்களுக்கான வரி நீக்கப்பட்டு வர்த்தக பண்டங்களுக்கான வரி மட்டுமே விதிக்கப்பட்டதாக அமைச்சர் நேற்று (31) நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்பு 24% ஆக இருந்த பணவீக்கம், தற்போது 7% ஆகக் குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் தொடர்ந்தும் அத்தியாவசிய பொருள்களின் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *