தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து கேரள மாநிலத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. கொச்சிக்கு அருகே உள்ள தைக்கல் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று சீருடை அணிந்த 15க்கும் மேற்பட்டோர் படகுகளில் வந்திறங்கியதாக மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பாதுகாப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது