தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புகளை பேணிய நான்கு சிங்களப் புலி உறுப்பினர்களை மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் கொழும்பு துறைமுகத்தின் மீது பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள இந்த சிங்கள புலி உறுப்பினர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்பட இருந்ததாகத் தெரியவருகிறது.
விடுதலைப் புலிகளிடம் இலட்சக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு குறித்த சிங்கள நபர்கள் ஒத்துழைப்பு வழங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவுப் பணிக்காகப் பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.