விடுதலைப் புலிகள் கொழும்புக்கு எதிராக தாய்லாந்தை பயன்படுத்துவதனை தடுப்பதற்கு அவர்களது நடமாட்டங்களை உன்னிப்பாக அவதானிக்குமாறு இலங்கை அந்நாட்டிடம் கோரியுள்ளதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரான ஹஸிட் பிரேமயாவை நேற்று வியாழக்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்த போதே இந்த கோரிக்கையை விடுத்திருக்கிறார்