இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவராக குமார் சங்கக்கார! உப தலைவராக முரளிதரன்!!

murali_sangakkara.jpgஇலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேசிய தெரிவுக் குழு இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியின் உப தலைவராக நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவராக இதுவரை கடமையாற்றிய மஹேல ஜயவர்தனää அண்மையில் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி மேற்கொண்ட கிரிக்கட் சுற்றுலாவுடன் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கிணங்க அணியின் புதிய தலைவர் மற்றும் உப தலைவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் ஜுன் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் வரை இலங்கை அணி எவ்வித சர்வதேச ஆட்டங்களிலும் கலந்துகொள்ளாது என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More
Leave a Reply to george Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • george
    george

    The english captain need player like muralitharan.he is the best in the world but indian premier league ignored him such as chennei kings. they only need players from pakistan and bangladesh.
    murali as a captain will be fantastic news also vice captain not bad.

    australia back on number one again. dose murali and sangkara make our heart race or winning race? let see how they cheeer up lankans fans.

    Reply