குடாநாட்டில் 93,832 பேர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்கின்றனர்

jaffna.jpgயாழ். மாவட்டத்தில் 27 ஆயிரத்து 601 குடும்பங்களைச் சேர்ந்த 93 ஆயிரத்து 832 பேர் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் வசித்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  இவர்களில் 21 ஆயிரத்து 591 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 672 பேர் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள்.

6 ஆயிரத்து 10 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 205 பேர் மேற்படி திகதிக்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு மேலதிகமாக படையினரின் பயன்பாட்டுக்கென மேலும் பல பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாலேயே இந்தக் குடும்பங்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தவர்களாக வாழ்கின்றார்கள்.

இதேவேளை, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கடகோள் அனர்த்தத்தால் பருத்தித்துறையிலிருந்து இடம்பெயர்ந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த 272 பேர் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *