ஜெயலலிதா உண்ணாவிரதம்: இலங்கை எம்.பி. கருத்து

05-jayalalitha.jpg
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் 10ம் தேதி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து இலங்கை தமிழ் எம்.பி.சிவாஜிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருச்சி உழவர்சந்தையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம், – இலங்கையில் தமிழர்களை காப்பற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளதாக தெரிவித்தார் .

அவருடைய அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த போராட்டம் இலங்கை தமிழர் பிரச்சினையில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமையும். இதன்மூலமாக மத்திய,மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படும்’ என்றும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *