இந்த வருடத்தினுள் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் 322.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளது.
தோட்டப் பாடசாலைகளில் வகுப்பறைகள், கட்டடங்கள், வாசிகசாலைகள், அமைத்தல் சாதாரண தரம் மற்றும் உயர் தரம் வரையுள்ள பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வு கூடங்கள் நிர்மாணித்தல் என்பவற்றுக்காக இந்த நிதி செலவிடப்படும் என கல்வி அமைச்சின் தோட்டப் பாடசாலை பிரிவு பணிப்பாளர் திருமதி எம். சபாரஞ்சன் தெரிவித்தார்.
பாடசாலைகளில் மலசல கூடங்கள், கம்பி யூட்டர் அறைகள் அமைத்தல் மற்றும் திருத்தியமைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காகவும் நிதி ஒதுக்கப்படவுள்ளதாக திருமதி சபாரஞ்சன் தெரிவித்தார். தோட்டப் பாடசாலைகள் அதிகமாக உள்ள ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கென இது வரை 265 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளன.
125 மில்லியன் ரூபா ஊவா மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர மேல் மாகாணத்திற்கு 25 மில்லியன் ரூபாவும் வடமேல் மாகாணத்திற்கு 12.5 மில்லியன் ரூபாவும் தென் மாகாணத்திற்கு 20 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த வருடத்தினுள் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமை ப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதினூடாக தோட்ட மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளக்கூடிய சூழல் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.