புதுக்குடியிருப்பில் 5 படையணிகளை பயன்படுத்துவதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

wanni-operations.jpgஇலங்கை யின் வடக்கே விடுதலைப்புலிகளிடம் எஞ்சியுள்ள கடைசி நகரமாகிய புதுக்குடியிருப்பு பகுதியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இலங்கை இராணுவம், ஐந்து படையணிகளை அந்தப் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருப்பதாக இலங்கை இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கடந்த 24 மணிநேரத்தில் புதுக்குடியிருப்பு கிழக்கு, அம்பலவன் பொக்கணை பொதுப் பிரதேசம், சாலை, திருமுறிகண்டி ஆகிய பகுதிகளில் உக்கிர சண்டைகள் இடம்பெற்றதாகவும், அதில் விடுதலைப்புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், இராணுவத்தரப்பில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *