நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் இன்று முதல் சுயமாக சமைக்க வழி

navy_rg.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமையல் உபகரணங்கள் மற்றும் சமையலுக்குத் தேவையான சகல உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் இன்று முதல் அவர்கள் சுயமாக சமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசம்பந்தர் தெரிவிக்கையில்;

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு இதுவரை சமைத்த உணவுகளே வழங்கப்பட்டு வந்தன. இன்று முதல் அவர்கள் சுயமாகவே சமைக்கத் தொடங்குவர் எனத் தெரிவித்தார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் 14 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சகல அடிப்படைத் தேவைகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதுடன் இதுவரை காலமும் சமைத்த உணவுகளே வழங்கப்பட்டு வந்தன.

இவர்கள் சுயமாக சமைப்பதற்கு வசதியாக உலக உணவுத் திட்டம் அரிசி உட்பட சமைப்பதற்கான உணவுப் பொருட்களையும் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதுவராலயம் ஆகியன சமையலுக்கான உபகரணங்களையும் வழங்கியுள்ளன.

இதனைத் தவிர ஏனைய பொருட்களை பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. தேவை ப்படுமளவுக்கு குடி தண்ணீர் நீர்த்தாங்கிகள் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் மேலும் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உணவுப் பொருட்கள் போதியளவில் உள்ளதால் தற்போது எந்த உணவுப் பொருள் தட்டுப்பாடுமில்லை யெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *