இறைவரித் திணைக்கள நடவடிக்கைகள் யாவும் இன்று (24) வழமைபோல இடம்பெறும் என இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எஸ். அங்கம்மன தெரிவித்தார்.
புலிகளின் விமானம் விழுந்து நொறுங்கியதால் இறைவரித் திணைக்கள 12ம் மாடி கூடுதலாக சேதமடைந்தது. ஏனைய மாடிகளிலும் சிறுசிறு சேதங்கள் ஏற்பட்டன. 12ம் மாடி தவிர்ந்த ஏனைய மாடிகளில் இன்று முதல் பணிகள் வழமைபோல இடம்பெறும் எனவும் விமானம் வீழ்ந்ததால் கணனி வலைமைப்பிற்கோ ஆவணங்களுக்கோ சேதம் ஏற்படவில்லை எனவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.
12ம் மாடியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வேறு இடமொன்றுக்கு மாற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை துரிதமாக திருத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.