எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை புதுடில்லியில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானியை சந்தித்து பேசிய அதேநேரம், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசியுள்ளார்.
அவசர பயணமாக புதுடில்லி சென்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க அத்வானியை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து எடுத்துக் கூறியுள்ளதுடன், இலங்கை விவகாரம் குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், இந்திய மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் எழுதிய ராஜீவ்காந்தி; மாற்றத்திற்கான காலம் என்ற நூல் ஆய்வு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுடில்லி சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முகர்ஜியை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் இது தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு பற்றியும் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் சந்திரிகா குமாரதுங்க ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, தற்போதைய நிலைமையில் நீங்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்; புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்திருப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அத்துடன், “குண்டு வீசி ஆயிரக்கணக்கான மக்களை கொல்வதிலும் பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்குவதிலும் எனக்கு நம்பிக்கையில்லை. எனது ஆட்சிக்காலத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுக்கு பிரபாகரனை இணங்க வைத்தேன். எனது ஆட்சிக்காலத்தில் புலிகள் வசமிருந்த 70 தொடக்கம் 75 சதவீதமான நிலப் பிரதேசங்கள் மீட்கப்பட்டு விட்டன. தற்போதைய அரசாங்கம் நாங்கள் வாங்கிய ஆயுதங்களைக்கொண்டு மீதமுள்ள நிலப் பகுதிகளையும் மீட்டிருக்கிறது’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
palli
அக்கா இது பிடிக்காமல் தானே இன்று கொழும்பில் பட்டம் விட்டு விட்டார்கள். போன செலவு வீண்தான் திரும்பி வாருங்கள். இருப்பினும் முயற்ச்சிக்கு தமிழனாய் நன்றி.