‘சன்’ நிலைய மறு ஒளிபரப்பு நிலையமே சீல்வைப்பு: ஊடக சட்டத்தை மீறிய ஊடுருவல்; – ஹெகலிய

kahaliya.jpgசென்னை யிலிருக்கும் “சன்’ தொலைக்காட்சி நிலையத்தின் மறு ஒளிபரப்பு நிலையமே வவுனியா வைரவபுளியங் குளத்தில் படையினரால் “சீல்’ வைக்கப்பட்டதாக தெரிவித்த தேசியப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமலேயே இந்த மறு ஒளிபரப்பு நிலையம் இயங்கி வந்ததாகவும், இது ஊடகசட்டவிதிகளை மீறிய ஊடுருவல் எனவும் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய தரப்பில் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு பதிலளித்தார். இந்த மறு ஒளிபரப்பு நிலையம் அங்குள்ள இயக்க அலுவலகமொன்றிலேயே இயங்கி வந்ததாகத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல அது சென்னையிலுள்ள சன் தொலைக்காட்சி நிலையத்தின் மறு ஒளிபரப்பு நிலையமாக இலங்கையில் செயற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடம்பெறும் இலங்கை அரசுக்கு எதிரான பிரசாரங்கள், புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை இந்த மறுஒளிபரப்பு நிலையம் தொடர்ச்சியாக இங்கு ஒளிபரப்பி வந்துள்ளது. அத்துடன் இந்த மறு ஒளிபரப்பு நிலையம் இயங்குவதற்கான அனுமதிப்பத்திரத்தையோ, அரச அங்கீகாரத்தையோ சன் தொலைக்காட்சி நிலையம் பெற்றிருக்கவில்லை. எனவே இது சட்டவிரோதமான ஊடக நிறுவனமாகவே இங்கு இயங்கி வந்துள்ளது. இதன் காரணமாகவே படையினர் இந்த மறு ஒளிபரப்பு நிலையத்தை மூடி சீல் வைத்ததோடு அங்கு கடமைபுரிந்த நால்வரையும் கைது செய்துள்ளனர் என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *