பத்து நாட்களுக்குள் 30 ஆயிரம் சிவிலியன்கள் அரச பகுதிக்கு வருகை! – இராணுவப் பேச்சாளர் தகவல்

wanni.jpgஅரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலிகளின் பிடியிலிருந்து தப்பி கடந்த பத்து நாட்களுக்குள் மாத்திரம் சுமார் 30 ஆயிரம் சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை 33,131 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளததோடு, கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 3848 பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். இத்தொகை கடந்த பத்து நாட்களுக்குள் மாத்திரம் 29, 283 ஆக அதிகரித்துள்ளது.

கடந் வருடத்தில் மாத்திரம் மொத்தமாக 1704 சிவிலியன்களே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருகை தந்திருந்தனர். தங்களது பிடியிலிருந்து பொதுமக்கள் தப்பிச் செல்வதை பல்வேறு முறைகளில் தடுத்த புலிகள், தற்பொழுது தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு அந்த மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி தடுக்க முயற்சித்து வருகின்றனர். எனினும் புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி மக்கள் தொடர்ந்தும் வந்த வண்ணமுள்ளதாக பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *