முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இன்று புதன்கிழமை அறுவை சிகிச்சை

0302-karunanidhi.jpgமுதுகுவலி குறையாத காரணத்தினால் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இன்று (புதன்கிழமை) அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என டாக்டர்கள் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காணப்படுவதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் முதுகில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக 15 நாட்களுக்கு மேலாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வலி குறையாத காரணத்தினால் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டு, அவரது தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள வலியை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளார்கள்.

இதுகுறித்து 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து வந்த டாக்டர் ஏ.ஜெய்ஸ்வாலும், மற்ற டாக்டர்களும் கலந்து பேசி அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இந்த அறுவை சிகிச்சை இன்று (11.2.2009) புதன்கிழமை  நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் கருணாநிதியின் நலனை கவனிக்க விசேட டாக்டர்களைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதி விரைவில் நலம் பெற்றிடும் வகையில் பார்வையாளர்கள் கண்டிப்பாக ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    ஜயா குணம் பெற வாழ்த்துக்கள்.
    என்ன இது அறுவை சிகிச்சையிலுமா கூட்டணி. அரசியல் ரெம்ப மோசமுங்கோ.

    Reply