ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் இன்று இரவு 9 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை இரவு 9 மணி தொடக்கம் சுமார் 48 மணிநோம் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கான கொடுப்பனவு மற்றும் பதவியுயர்வு என்பவற்றை வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.