வன்னிப்பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்புவதில் சிரமம் – ஐ.நா

food.jpgஐ.நா. மன்ற உலக உணவுத் திட்டத்தின் மூலமாக வன்னிப் பகுதிக்கு அனுப்பப்பட்டுவந்த உணவுப் பொருட்களை தற்போது அனுப்பமுடியவில்லை.
இதனால் வன்னியில் உள்ள மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள் என்று உலக உணவுத் திட்டம் அறிவித்திருந்தது.

இது தொடர்பாக உலக உணவுத் திட்டத்தின் இலங்கை செயற்பாடுகளுக்கான துணை இயக்குநர் அஸேப் அஸ்ரத் கூறும்போது, உணவுப் பொருட்களை வன்னிக்கு அனுப்புவதற்கான எல்லா ஆயத்தப் பணிகளையும் தாங்கள் செய்திருப்பதாகவும், ஆனால் பாதுகாப்பு சூழல் தொடர்பான அனுமதியை அதிகாரிகள் கொடுக்காததால் தாங்கள் உணவுப் பொருட்களை அனுப்ப முடியாமல் இருப்பதாக கூறினார்.

இது தொடர்பாக இலங்கை அரசின் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறும்போது, வன்னிப்பகுதிகளில் அரசாங்க அதிபர்கள் இப்போது இல்லை என்றும், உலக உணவு திட்டத்தினர் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வரையிலுமே உணவினை கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும், ஆதலால் தற்போது உணவுப்பொருட்களை மேற்கொண்டு வன்னிப்பகுதிக்கு எடுத்துச் செல்வதில் அரசாங்கம் தற்போது ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும், எனினும் மக்களுக்கு உணவுப்பொருட்களை எடுத்து செல்வது குறித்து ஆலோசனைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *