12 வயது சிறுமியை பயன்படுத்தி புலிகள் தற்கொலைத் தாக்குதல்

udaya_nanayakkara_.jpgஉடம்பு முழுவதிலும் குண்டைக் கட்டி 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாதுகாப்புப் படையினரை நோக்கி அனுப்பிய புலிகள் அந்தக் குண்டை வெடிக்கச் செய்த தில் அந்தச் சிறுமியின் உடல் வெடித்துச் சிதறி சின்னா பின்னமாகிய கோரத்தை கள முனையில் நேரில் கண்ட பாதுகாப்பு படைவீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினரிடம் சரணடையும் சிவிலியன்கள் போன்று கைகளை உயர்த்தியவாறு அந்தச் சிறுமி சாலையின் வடக்கே படையினரை நோக்கி வந்துள்ளார். உடனடியாக அந்த சிறுமியை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பொருட்டு இராணுவத்தினர் அந்தச் சிறுமியை அண்மித்தபோது அவரது உடம்பில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியுள்ளது.

புலிகளின் இறுதி கடற்புலி தளமாக விளங்கிய சாலையை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் 55வது படைப் பிரிவினரே இந்த அகோர காட்சியை கண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் அந்தச் சிறுமியை நோக்கிச் சென்ற இரண்டு இராணுவ வீரர்களும் படுகாயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சிறார்களை யுத்தத்தில் பலாத்காரமாக ஈடுபடுத்திய புலிகள் தற்பொழுது அவர்களை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளமை தெளிவாக விளங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *