சுதந்திர தின பிரதான வைபவங்கள் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறுவதை முன்னிட்டு பம்பலப்பிட்டியிலிருந்து மருதானை வரையிலான ரயில் சேவை நேற்று நள்ளிரவு முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் இந்த புதிய நடைமுறை அமுலில் இருக்கும் என்று கொழும்பு பிராந்தியத்திற்கு பொறு பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் தென் பகுதிக்குச் செல்பவர்கள் பம்பலப்பிட்டி வரைக்கும், பம்பலப்பிட்டி யிலிருந்து கொழும்புக்கு வருபவர்கள் மருதானை வரைக்கும் பயணம் செய்ய தேவையான இணைப்பு பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் அதே புகையிரத பயணச் சீட்டை வைத்துக் கொண்டே இந்த பஸ் வண்டியில் இலவமாக சென்று வரமுடியும் என்றும் தெரிவித்தார்.
palli
இதுதானா சுகந்திர கொடி ஏற்றி மிட்டாய் கொடுப்பது.