ரி.எம்.வி.பி. அமைப்பின்; உறுப்பினர் சுட்டுக்கொலை

pistal.jpg
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் செங்கலிடி எல்லையில் வைத்து நேற்றையதினம் காலை 8.30 மணியளவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

செங்கலடி நாகதம்பிரான் கோவிலடியைச் சேர்ந்த புத்திரசிகாமணி மோகனதாசன் (வயது 31) என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இவர் நேற்றுக் காலை சைக்கிள் ஒன்றில் தனது வீடுநோக்கி சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஏறாவூ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    இதுதான் கிழக்கின் ஜனனாயகம்.

    Reply