வன்னிப் பகுதியில் விமான மற்றும் ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 48 நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக 16 அம்புலன்ஸ்களில் மன்னார் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இவர்கள் அம்புலன்ஸ்கள் மூலம் மன்னாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மன்னார் ஆஸ்பத்திரியில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதுடன் பொதுமக்களும் பொது அமைப்புகளும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்துவருகின்றனர். கடந்த வாரமும் 28 நோயாளர்கள் வவுனியாவில் இருந்து மன்னார் ஆஸ்பத்திரிக்கு இடமாற்றப்பட்டிருந்தனர்.
இதேவேளை, வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு அவசர சிகிச்சையளிப்பதற்கு பேசாலை அரசினர் வைத்தியசாலை,முருங்கன் மாவட்ட வைத்தியசாலை என்பவற்றையும் தயாராக இருக்குமாறு மன்னார் சுகாதார பணிமனை வேண்டுகோள் விடுத்துள்ளது.