மேல் மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவினால் இந்த வாரம் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் திகதியிலிருந்து 5 முதல் 7 வாரத்திற்குள் தேர்தல் நடாத்தப்படும்.
மேல் மாகாண சபை தேர்தல் மார்ச் நடுப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல் திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார். மேல் மாகாண சபையின் பதவிக்காலம் ஆகஸ்ட் 4ஆம் திகதி நிறைவடைய உள்ள நிலையில் மாகாண சபை கடந்த வாரம் கலைக்கப்பட்டது.