புலிகள் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்துள்ள சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருவதைத் தடுக்கும் நோக்குடனேயே கல்மடுக்குளக் கட்டை புலிகள் குண்டுவைத்து தகர்த்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
சிவிலியன்கள் தப்பி வருவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்கள் வரும் வழிகளில் மிதிவெடிகளையும், கண்ணி வெடிகளையும் புலிகள் புதைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.கல்மடுக்குளக்கட்டு உடைக்கப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் பெரும் அசெளகரியங்களுக் குள்ளாகியுள்ளதுடன் தர்மபுரம், விசுவமடு பகுதிகளிலுள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் நீர்தேங்கி காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
குளத்து நீர் பரவியுள்ள பிரதேசங்களில் நீர்த்தேங்கி நின்று சதுப்பு நிலங்களாக மாறியுள்ள போதிலும் இந்த செயற்பாடுகள் முன்னேறிவரும் படை நடவடிக்கைகளுக்கு எதுவித பாதிப்புகளும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, விசுவமடு, புளியன்பொக்கரைக்கு தென்பகுதி, தர்மபுரத்திற்கு கிழக்கு மற்றும் புளியன் பொக்கரைக்கு தென்கிழக்கு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதல்களின் போது கொல்லப்பட்ட புலிகளின் பத்து சடலங்கள், ரி. 56 துப்பாக்கிகள்-08, மோட்டார் குண்டு கள்-06, பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துவகைகளையும் படையினர் மீட்டெடுத்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பிரதேசத்தில் மேலும் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.