![]()
ஜேர்மேனிய தூதுவர், மறைந்த-சண்டேலீடர் ஆங்கில வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியைகளில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து,இலங்கைவெளியுறவு அமைச்சு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. வெளியுறவுத்துறை செயலர் பாலித கோஹன இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்ற ஜேர்மேனிய தூதுவர், ஜர்கன் ரெத்,”இன்று ஒருவர் மௌனித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் பற்றி ஏற்கனவே அரசுடன் பேசியிருக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் பற்றிய எமது செயற்பாடுகள் தாமதமாகி விட்டன. இன்று மனிதத்துவத்தின் பெரும் உண்மைக் குரலை நாம் இழந்துவிட்டோம் எனகுறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே இலங்கையின் வெளியுறவு செயலாளர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.