வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர்களின் 42 சடலங்களும் நேற்று (14) அரசாங்க செலவில் புதைக்கப்பட்டன. மேற்படி சடலங்கள் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் நேற்று கூறினர். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் சடலங்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக வவுனியா ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் பல சடலங்கள் அழுகியிருந்ததாக அறிவிக்கப்படுகிறது. மேற்படி சடலங்களை ஐ. சி. ஆர். சி. ஊடாக புலிகளிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவற்றை அரச செலவில் புதைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி நேற்று 26 ஆண்களினதும் 16 பெண்களினதும் சடலங்கள் புதைக்கப்பட்டன.