ஐக்கிய அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக செல்வதற்கு முயன்ற இலங்கையர் மூவரும் அவர்களுக்கு உதவியவர் ஒருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். மக் அலனிலுள்ள மில்லர் சர்வதேச விமான நிலையத்தில், மூன்று சட்டவிரோத குடிவரவாளர்களுக்கான விமானப் பயணச் சீட்டுகள், போலி கனேடிய அடையாள அட்டைகளுடன், கனடாவைச் சேர்ந்த சுரேஷ் சுந்தரலிங்கம் (வயது 28) என்பவரை கைது செய்தனர்
அத்துடன், அவரின் உதவியுடன் ஐக்கிய அமெரிக்காவினுட் புக முனைந்த இலங்கையர் மூவரும் அமெரிக்க எல்லைப்பகுதி ரோந்து படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தம் குடும்பத்தை ஐக்கிய அமெரிக்கா மெச்சிக்கோ ஊடாக கனடாவுக்கு அழைத்துச் செல்வதற்காக 32 ஆயிரம் டொலர்களை சுந்தரலிங்கத்திற்குச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், வழக்கறிஞரின்றி புலனாய்வாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு சுந்தரலிங்கம் மறுத்து விட்டார். இந்நால்வரதும் ஆரம்ப விசாரணைகள் நாளை இடம் பெறும். உரிய மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் தமிழ் மொழியிலேயே வாக்கு மூலம் அளிப்பர்.