கிளிநொச்சி வீழ்ச்சி தற்காலிகமானதே. மீண்டும் எங்களிடமே கிளிநொச்சி வந்து சேரும் – பா.நடேசன் நம்பிக்கை

nadesan.jpgஇது தொடர்பாக புலிகள் ஆதரவு தமிழ்நெட் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கிளிநொச்சியில்தான் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தோல்விகளைத் தழுவியுள்ளது இலங்கை ராணுவம். எனவே மீண்டும் கிளிநொச்சி எங்களிடமே வந்து சேரும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. உலக நாடுகளின் ஆயுத பலத்தோடு இலங்கை ராணுவம் எங்களுடன் மோதி வருகிறது. ஆனால் மக்களின் ஆதரவுடன் மட்டும் நாங்கள் போராடி வருகிறோம். எனவே இந்தப் போரில் எங்களுக்கே இறுதி வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு பலமாக உள்ளது.ஈழத்தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்ல. அவர்களுக்கு துன்பம் ஏற்படும் போது 7 கோடி தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து குரல் கொடுப்பார்கள்.

கிளிநொச்சியை ராணுவம் பிடித்துள்ளதை விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக நாங்கள் பார்க்கவில்லை. போரில் இழப்புகளை குறைப்பதற்காக பின் வாங்கி செல்வது என்பது ஒரு தந்திரம். தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கவே இலங்கை அரசு நினைக்கிறது.  கிளிநொச்சியில் உள்ள மக்கள் இப்போது வன்னி பகுதியில் பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இழந்த பகுதிகளை விடுதலைப் புலிகள் மீண்டும் கைப்பற்றுவார்கள்.

இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவிக ளை நிறுத்தி எங்கள் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். உலக தமிழினம் ஒன்றுபட்டு எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தமிழ் மக்களிடமிருந்து எங்களை அன்னியப்படுத்தி விடலாம் என இலங்கை அரசு நினைக்கிறது. ஆனால் இது வெற்றி பெறாது. ஊடுறுவல் படையின் ஏஜென்டுகள் மற்றும் பொம்மை மனிதர்களின் முயற்சிகள் பலிக்காது.இலங்கை ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை மட்டுமல்லாது சிங்கள மக்களையும் கூட நாங்கள் காத்துள்ளோம். சிங்கள மக்களுக்காவும்தான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் என்றார் அவர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *