வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் 2 மாதத்தினுள் அபிவிருத்திப் பணிகள் – லக்ஷ்மன் யாப்பா

laksman-yaappa.jpgவடக் கில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுமென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா  அபேவர்தன தெரிவித்தார். கிளிநொச்சியை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்டது ஒரு இனவாதப் போராட்டமென்று தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு சமமான அபிவிருத்தியைத் துரிதமாக மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (06) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை விடவும், வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுமென்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, மீட்கப்பட்ட பிரதேசங்களுக்கு மக்களைக் கொண்டு வந்து சேர்ப்பதில் படையினருக்குப் பாரிய பொறுப்பு உள்ளதென்றும் கூறினார்.

“ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடையுமாறும், சிவிலியன்களை விடுவிக்குமாறும் புலிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தர்ப்பம் வழங்கியிருந்தார். ஆனால் புலிகள் ஜனாதிபதியின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டார்கள்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *