இலங் கையைச் சேர்ந்த இருவருக்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ரியாத்திலுள்ள வங்கி ஒன்றிற்கு வெளியே சூடானியர் ஒருவரை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தினை கொள்ளை அடித்த குற்றத்திற்காகவே இவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த வருடம் மட்டும் சவூதி அரேபியாவில் 92 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.