மன்னார் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ச் செம்மொழி மாநாடு மன்னாரில் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் தமிழியல் துறையில் அரும்பணியாற்றிய பெரியோர்களின் பெயரில் ஞாபகார்த் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
விருது பெறும் பதினைந்து பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்த்தூது தனிநாயகம் விருதை ஜின்னா சரிபுதீன், அறுமுகநாவலர் விருதை பேராசிரியர் சிவலிங்கராஜா, சுவாமி விபுலானந்தர் விருதை பேராசியரியர் அ.சண்முகதாஸ், சோமசுந்தரப்புலவர் விருதை கவிஞர் மேமன்கவி, வித்துவான் ரகுமான் விருதை திருமதி ந.சிறீதேவி, சுவாமி ஞானப்பிரகாசர் விருதை பேராசிரியர் எம்.ஏ.நுஹ{மான், கலாயோகி ஆனந்தகுமாரசாமி விருதை வை.சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி), சின்னத்தம்பி புலவர் விருதை வே. இறைபிள்ளை, முதுதமிழ் புலவர் நல்லதம்பி விருதை அகளங்கன், அறிஞர் சித்திலெப்பை விருதை நா.யோகேந்திரநாதன், தாவீது அடிகள் விருதை டொமினிக் ஜீவா, பண்டிதை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி விருதை திருமதி லீலாம்பிகை செல்வராஜா, ஈழகேசரி பொன்னையா விருதை பத்திரிகையாளர் கானமயில்நாதன், இசைப்புலவர் ந.சண்முகரட்ணடம் விருதை திருமதி விஜயகுமாரி, சிரித்திரன் சிவஞானசந்தரம் விருதை ச.யோகரத்தினம் ஆகியோர் பெறுகின்றனர்.