கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் உத்தரவின் பேரில் புறக்கோட்டை சந்தையில் இன்று முதல் வெள்ளை முட்டை ஒன்றை 13 ரூபா 20 சதத்துக்கும், சிகப்பு நிற முட்டை ஒன்றை 13 ரூபா 70 சதத்துக்கும் பெற்றுக் கொள்ள முடியுமென கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், அண்மைக் காலத்தில் முட்டையின் விலை அதிகரித்து ஒரு முட்டை 15 முதல் 17 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் (சதொச) மூலம் பண்ணைகளுக்கு சென்று முட்டைகளை கொள்வனவு செய்து பொருளாதார கேந்திரங்கள் மற்றும் லக் சதொச மூலம் அவற்றை நுகர்வோருக்கு விற்பனை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். இதனால் முட்டை விலை குறைந்துள்ளது. இவ்வாறு சதொச மூலம் தினமொன்றுக்கு ஒரு லட்சம் முட்டைகள் பொருளாதார கேந்திரங்களிலும் லக் சதொச மூலமும் விற்பனை செய்யப்படுவதாகவும் இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.