புதையல் தோண்டிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸார் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. இவர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையக மட்டத்தில் தனியாக விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி கூறினார்.
பொலன்னறுவை, புராதன ரஜமஹா விகாரையை அண்மித்த காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 10 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பொலன்னருவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின் ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையக மட்ட பொலிஸ் திணைக்கத்தில் விசாரணை நடத்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.