இரு ஏஜென்சிகளின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண் வேலைக்கு சென்றிருந்தபோது பல்வேறு இம்சைகளுக்கு உள்ளான ஆரியவதியை சவூதிக்கு அனுப்பிவைத்த இலங்கையின் வெளிநாட்டு வேலை முகவர் நிலையங்கள் இரண்டினது அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இந்தத் தீர்மானத்தை எடுத்து ள்ளது.

இதில் ஒரு நிறுவனம் ஆரியவதிக்கு விசாவைப் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் மற்றைய முகவர் நிலையம் ஆரியவதியை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத் துள்ளதாகவும் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *