மூதூரில் நேற்று (Aug 24 2010) இடம்பெற்ற கண்டிவெடிச் சம்பவத்தில் ‘புல்டோசர்’ ஒன்று சேதமடைந்துள்ளது. திருகோணமலை மாவட்டம் மூதூர் தோப்பூர் பகுதியில் ஐ.நா. அபிவிருத்திட்டத்தின் கீழ் கணிகளைத் துப்புரவாக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அப்பணியிலீடுபட்டுக் கொண்டிருந்த ‘புல்டோசர்’ கண்ணிவெடியில் சிக்கி சேதமானது.
நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து ஐ.நா.வின் அப்பணி இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காணியில் அகற்றப்படாத நிலையிலிருந்த கண்ணிவெடியொன்றே வெடித்ததாக சந்தேகிக்கப்படுகின்றது. எனினும், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.