கண்டி எஸல பெரஹரவின் இறுதி ஊர்வலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிடுவார். பெரஹெர இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது. கண்டி எஸல பெரஹர ஆரம்ப காலம் தொட்டு பெரஹரவின் இறுதி ரந்தோலி பெரஹர ஊர்வலத்தை நாட்டின் தலைவர் பார்வையிடுவது சம்பிரதாயமாக இருந்து வருகின்றது.
அதற்கமையவே ஜனாதிபதியும் கண்டியில் அமைக்கப்பட்டுள்ள விசேட மேடையிலிருந்து ஊர்வலத்தை பார்வையிடுவார். ஜனாதிபதியுடன் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ – மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கா மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு ரந்தோலி இறுதி பெரஹர ஊர்வலத்தைப் பார்வையிடுவார்கள்.