இரத்தினபுரி, பத்துல்ஹத்தவில் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது யுவதியும் உயிரிழந்துள்ளார். சந்தமாலி ஆட்டிக்கல எனும் 15வயது யுவதி மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
அவரது சகோதரன் மதுக சாரங்க ஆட்டிகலயும் ஒன்று விட்ட சகோதரியான சந்துனி உபேக்க ஆட்டிகலயும் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் பத்து வயதுடையவர்களாவர்.
இரத்தினபுரி பத்துல்ஹத்தயில் உள்ள அவர்களது வீட்டுக்கு அருகே இருந்த ரம்புட்டான் மரத்தில் ரம்புட்டான் பழங்களை பறிக்க கம்பியொன்றை பயன்படுத்திய சமயம் அந்தக் கம்பி ரம்புட்டான் மரத்துடன் சென்று கொண்டிருந்த அதிக மின்சார ஓட்டத்துடன் கூடிய மின்சாரக் கம்பியில் பட்டதால் அவர்கள் மூவரும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகினர். சந்தமாலியின் மற்றொரு சகோதரர் டியூசன் வகுப்புக்கு சென்றிருந்ததால் சம்பவம் இடம்பெற்ற சமயம் வீட்டில் இருக்கவில்லை.