இலங்கையைச் சேர்ந்த பெண்கள் சிங்கப்பூரில் பாலியல் தொழில்களில் பலவந்தமாக ஈடுபடுத்தப்படுவதாகவும் இது தொடர்பாக குற்றப்புலனபய்வு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இலங்கையிலிருந்து நடன நிகழ்சிகளுக்கு என சிங்கப்பூருக்கு அழைத்துச்செல்லப்படும் யுவதிகளே இவவாறு பாலியல் தொழிலுக்குட்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பெண்களை ஏமாற்றி அழைத்துச் செல்லும் நபர்கள் பெருமளவு பணத்தை இதன் மூலம் சம்பாதிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நவடிக்கையில் பிரதான நபராக செயற்பட்ட ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Related News:
பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு