தேசிய பால் பண்ணையாளர் களை ஊக்குவிப்பதுடன் 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் பால் தேவையின் அதிக அளவை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுக்கு ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை செலவு முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப குழு நேற்று முன்தினம் (10) அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியபோதே ஜனாதிபதி மேற்கூறிய ஆலோசனையை வழங்கினார்.
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து உதவிகளை யும் வழங்குமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.