கண்டி எசல பெரஹரா உற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஆறாயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப் படவிருப்பதாக மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.
விசேட கடமைகளுக்காக வெளியூர்களி லிருந்து சேர்த்துக்கொள்ளப்படும் பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பக்தர் கள் மீது நீதிநேர்மையாகவும் அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும். தமது கடமைகளை துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.