நோன்பு காலத்தையொட்டி இலங்கை முஸ்லிம்களுக்கென 15 மெற்றிக் தொன் பேரீச்சம்பழத்தை ஈரான் இஸ்லாமிய குடியரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இலங்கையின் ஈரான் நாட்டுக்கான தூதுவர் எம். எம். ஸ¤ஹைர் அந்நாட்டு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக இந்தப் பேரீச்சம் பழம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
இமாம் கொமெய்னி நிவாரண மன்றத்தின் ஊடாக இந்த பேரீச்சம்பழம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மன்றம் இலங்கை முஸ்லிம்களுக் கென தொடராக நாளாவது வருடமாகவும் பேரீச்சம்பழத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.