தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளின் மாநாடு யாழ்ப்பாணத்தில்.

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளின் மாநாடு ஒன்று நாளை மறுதினம் சனிக்கிழமை (August 07 2010) நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த தொழில் வாயப்பற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தினிது சமன் ஹென்னாயக்க யாழ்.மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2005ம் ஆண்டு மகிந்த சிந்தனையின் ‘தருண அருண’ என்ற திட்டத்தின் அடிப்படையில் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு Nவைலைவாயப்பு வழங்குவதாக உறுதியளித்திருந்தும் எதுவும் நடைபெறவில்லை என அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்யுள்ளார்.

மகாசபை செயலாளர் பதிவிகளுக்கு பட்டதாரிகள் 14 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்கவதாகவும், ஆயுர்வேத மருத்துவர்கள் 900 பேருக்கும், அழகியல் பாடத்திற்கான ஆசிரியர் நியமனம் மூவாயிரத்து 174 பேருக்கும் இவ்வருட வரவு செலவு திட்டத்தின் கீழ் நியமனங்கள் வழங்குவதாகவும் கூறப்பட்ட போதும், இது வரை இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே நாட்டிலுள்ள பட்டதாரிகள் அனைவரும் இணைந்து அரசாங்கத்திற்க அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், அதற்காகவே யாழ்ப்பாணத்தில் இம்மாநாட்டை நடத்துவதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *