தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான சந்தேகமே ஐ.தே.க.வுடன் ஆளும்தரப்பு பேசுவதற்குக் காரணம் தயாசிறி ஜயசேகர

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து சாதகமான சமிக்ஞை கிட்டாமல் போகலாமென்ற சந்தேகம் எழுந்ததன் காரணமாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன் பேசுவதற்கு முன்வந்தார் எனத் தெரிவித்த குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாம் மீண்டுமொரு தடவை கைகளைச் சுட்டுக்கொள்ளாத விதத்தில் நிதானமாகச் செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அன்று எம்பக்கமிருந்த 17 பேரை இழுத்தெடுப்பதற்கு அவர் மேடையேற்றியநாடகத்தை நாம் மறந்துவிடக்கூடாது எனவும் ஜனாதிபதி நம்பகத்தன்மையோடு நடந்து கொள்வதை உறுதி செய்து கொண்டே பேச்சுகளை தொடரவேண்டுமெனவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    இதில் முழுமையான அர்த்தம் பொதிந்துள்ளதாகவே நான் நினைகிறேன். தமிழன் அதுவும் யாழ்பாணத்தமிழன் சுயநலத்தின் குறியீடு. மட்டக்கபு அம்பாறை காலி மாவட்டத்தில்லுள்ள யாழ்பாணதமிழனையே தமிழனாக கணித்ததில்லை. ஒருவேளை ரகசியமாக காரியம் ஆற்றமுடியும் என கனவுகாணும் சருகு புலிகளே இந்த கூட்டமைப்பினர். இதற்கு உதாரணம் சுரேஸ் பிரேமசந்திரனும் அடைக்கலம் செல்வமும் போதுமானவை.
    தமிழன் என்று சொல்லும் போது யாரை தமிழனா கருதுகிறீர்கள்? இதற்கு விடைகாண்பதே இன்றை கேள்வியாக உள்ளது.

    Reply