கிரிக் கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் தன்னிடமில்லை என சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வியாழனன்று {08 ஜூலை} மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். அரசியலும் ஊடகங்களும் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே பேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆனால் தனது மனதைப் பொறுத்தவரை அனைவரும் சமமானவர்களே எனவும் முரளிதரன் கூறியுள்ளார். நலநிதிய அமைப்பொன்றுடன் பணியாற்றும் முரளி, சில திட்டங்களுக்காக வடக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து காணியொன்றையும் பெற்றுக்கொண்டுள்ளார். எனினும் சமூக சேவை செய்வதற்கு அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை இல்லை எனக் கூறியுள்ளார்.