அவசரகால சட்டம் நேற்று சபையில் 132 வாக்குகளால் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 32 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளும் கட்சி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததுடன் ஐ. தே. க., தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜ. தே. முன்னணி ஆகியன எதிராக வாக்களித்தன.
ஐக்கிய தேசியக் கட்சி கண்டி மாவட்ட எம். பி. அப்துல் காதர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான விவாதம் நேற்றுக்காலை ஆரம்பமானதுடன் விவாதத்தின் முடிவில் ஜனநாயக தேசிய முன்னணி எம். பி. விஜித ஹேரத் வாக்களிப்புக்கு கோரினார். இதனையடுத்து வாக்களிப்பு நடைபெற்றதுடன் 100 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் சபையில் நிறைவேறியது.
இதேவேளை; வரவு செலவுத் திட்டக் குழுநிலை மீதான விவாதமும் 131 வாக்குகளால் சபையில் நிறைவேறியது. ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் ஐ. தே. க. எம். பி. அப்துல் காதர் ஆதரவாக வாக்களித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜ.தே. முன்னணி ஆகியன நடுநிலை வகித்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.